|
Go to Index
|
 |
|
தமிழில் : அபு இஸாரா
|
கேள்வி எண்
- 8.
இஸ்லாமியர்கள் கால்நடைகளை - இரக்கமற்ற முறையில்
சித்திரவதை செய்து கால்நடைகளுக்கு வேதனை தரும்
முறையில் அறுக்கிறார்களே?. இது சரியா?.
பதில்:
'ஸபிஹா' என்றழைக்கப்படும் - இஸ்லாமியர்கள் கால்நடைகளை
அறுக்கும் விதம் குறித்து மக்களில்
பொரும்பாலோரிடமிருந்து விமரிசனங்கள் வருகின்றன. இந்த
கேள்விக்கு பதிலளிக்கும் முன் - மேற்படி பொருள்
குறித்து - ஒரு சீக்கியருக்கும் - ஒரு
இஸ்லாமியருக்கும் நடந்த உரையாடலை உங்களுக்கு சொல்லி
விடுறேன்.
சீக்கியர் ஒருவர் இஸ்லாமியரைப் பார்த்து கேட்டார் -
நாங்கள் ஆடு மாடுகளை அறுக்கும் போது - அதன் பின்புற
மண்டையில் ஒரே போடு போட்டு - கொன்று விடுகிறோம்.
அதுபோல செய்யாமல் - நீங்கள் ஏன் அவைகளின் கழுத்தை
அறுத்து - சித்ரவதை செய்து கொல்கிறீர்கள்?.
மேற்படி கேள்வி கேட்கப்பட்ட இஸ்லாமியர் சொன்னார்:
கால்நடைகளை பின்புறம் இருந்து தாக்கிக் கொல்வதற்கு
உங்களைப் போல நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல. நாங்கள்
தைரியசாலிகள். அதனால்தான் முன்பக்கமாக அதன் கழுத்தை
அறுத்து கொல்கிறோம் என்று.
மேற்படி சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும் - ''ஸபிஹா'
என்றழைக்கப்படும் - இஸ்லாமியர்கள் கால்நடைகளை
அறுக்கும் விதம்தான் மனிதத்தன்மை உள்ளது மற்றும்
அறிவியல் ரீதியாக சிறந்த முறை என்பதை கீழக்காணும்
விபரங்கள் நமக்கு தெரிவிக்கும்.
1. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்.
அரபிமொழியில் 'ஸக்காத்' என்றால் 'தூய்மை' என்ற பொருள்.
மேற்படி சொல்லிலிருந்து 'ஸக்கய்தும்'
(தூய்மைப்படுத்துதல்) என்ற வினைச்சொல் பெறப்பட்டது.
இஸ்லாமிய முறையில் காலந்டைகளை அறுப்பதற்கு கீழக்காணும்
நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள்
மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.
கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால்
அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை
உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு -
மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.
B. 'ஸபிஹா' என்றால் அரபிமொழியில் அறுத்தல் என்று
பொருள்படும். மேற்படி இஸ்லாமிய முறையில் கால்நடைகளை
அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும்
இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு -
கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு
செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம்
துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம்
முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும். இரத்தம்
முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் - அறுக்கப்பட்ட
கால்நடைகளின் இரத்தம் - இரத்தக் குழாய்களில் தங்கி
கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை
அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க
வேண்டும். தண்டுவடும் துண்டிக்கப்படுவதால் -
இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள்
பாதிக்கப்பட்டு - இதயம் நின்று போகக் கூடிய நிலை
உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள் இரத்தம் இரத்த
நாளங்களில் தங்கிவிடக் கூடும்.
D. கிருமிகளும் - நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக
அமைவது இரத்தமே.
கிருமிகளும் - நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக
அமைவது உடலில் உள்ள இரத்தமே. இஸ்லாமிய முறையில்
கால்நடைகளை அறுக்கும்போது - கால்நைடகளின் உடலில் உள்ள
இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால்
நோய்க்கிருமிகள் உருவாவதில்லை.
E. .இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின்
இறைச்சி நீ;ண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம்
கலந்து விடாமல் இருப்பதால் - வேறுவிதமாக கொல்லப்படும்
கால்நடைகளின் இறைச்சியைவிட இஸ்லாமிய முறையில்
அறுக்கப்படும் இறைச்சி நீ;ண்ட நேரம் கெடாமல்
இருக்கும்.
F. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது -
கால்நடைகள் வலியை உணர்வதில்லை.
இஸ்லாமிய முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொழுது -
கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக
அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய
நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால்
அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம்
உடலிலிருந்து வெளியேறுவதால் - உடலில் உள்ள
சதைப்பாகங்கள் - இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால்
ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் -
துள்ளுவதாகவும் - துடிப்பதாகவும் நமக்குத்
தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.
|