|
Go to Index
|
 |
|
தமிழில் : அபு இஸாரா
|
கேள்வி எண்:
23
குர்ஆனின் ஏராளமான இடங்களில் அல்லாஹ் மிக்க
கருணையாளன். மிக்க மன்னிப்பவன் என்று குறிப்பிடுகிறது.
ஆனால் அதே நேரத்தில் கடுமையான தண்டனைகள் உண்டும்
என்றும் குறிப்பிடுகின்றது. ஆகவே இறைவன்
மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?.
பதில்:
1. அல்லாஹ் அளவிலா கருணையாளன்..!
அல்லாஹ் அளவிலா கருணையாளன் - என்று அருள்மறை குர்ஆன்
பலமுறை கூறுகிறது. அருள்மறை குர்ஆனின் 114
அத்தியாயங்களில் ஒரேயொரு அத்தியாயம் (அத்தியாயம் 9
ஸுரத்துத் தௌபாவைத் தவிர, மற்ற அனைத்து
அத்தியாயங்களும் 'பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்' -
என்கிற அழகிய வாக்கியத்தோடு ஆரம்பமாகின்றன.
'பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்' - என்கிற அரபிப்
பதத்தின் பொருள் - அளவிலா கருணையும், இணையிலா
கிருபையுமுடைய அல்லாஹ்வின் திருப்பெயரால் -
என்பதாகும்.
2.அல்லாஹ் மன்னிப்பாளன்.
அருள்மறை குர்ஆனின் உள்ள ஏராளமான வசனங்கள் அல்லாஹ்
மன்னிப்பாளன் என்று கூறுகின்றது. குறிப்பாக அருள்மறை
குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துன்னிஸாவின்
25வது வசனமும், ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல்
மாயிதாவின் 74வது வசனமும் கீழ் கண்டவாறு கூறுகின்றன.
'..இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க
கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (
4:25).
'..அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், பெரும்
கருணையாளனாகவும் இருக்கின்றான். ( 5:74).
3.அல்லாஹ் தண்டனை பெறத் தகுதியானவர்களுக்கு கடுமையான
தண்டனை வழங்குகிறான்.
அல்லாஹ் கருணையாளனாகவும், மன்னிப்போனாகவும்
இருந்தாலும் - தண்டனை பெறத் தகுதியானவர்களுக்கு
கடுமையான தண்டனை வழங்குவதில் விதிவிலக்கில்லாமல்
தண்டனை வழங்குகிறான். அருள்மறை குர்ஆனின் வசனங்கள்
பலவற்றில் இறை விசுவாசம் கொள்ளாதவர்களுக்கும், இறை
உண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் கடுமையான தண்டனை
உண்டு என்று குறிப்பிடுகிறது. அல்லாஹ்வின் கட்டளையை
ஏற்க மறுத்தவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என
அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகிறது. அருள்மறை குர்ஆனின்
பல வசனங்கள் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்க
மறுத்தவர்களுக்கு நரகத்தில் வழங்கப்படும் கடுமையான
தண்டனைகளின் வகைகள் என்ன?. அவைகள் எவ்வாறு
வழங்கப்படும் என்றும் குறிப்பிடுகின்றது.
'யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை
நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்: அவர்கள்
தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு)
தோல்களை, அவர்கள் வேதனையை அனுபவிப்பதற்கென,
அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் -
நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும்
இருக்கின்றான்.' ( 4:56)
4.அல்லாஹ் நீதியாளன்.
அல்லாஹ் மன்னிப்பாளனா?. இல்லை பழிவாங்குபவனா?. என்பதே
இங்கு கேட்கப்பட்ட கேள்வி. இங்கு ஒரு முக்கியமான
கருத்தை நாம் கவனிக்க வேண்டும். அல்லாங் மன்னிப்பவன்.
மிக்க கருணையாளன். அதே நேரத்தில் அல்லாஹ் நீதி
பரிபாலிப்பவனும் ஆவான். எனவே நீதி பரிபாலிக்கப்பட
வெண்டுமெனில், நிராகரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை
வழங்கியேத் தீர வேண்டும்.
அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம்
ஸுரத்துன்னிஷாவின் 40வது வசனம் கீழ்கண்டவாறு
குறிப்பிடுகிறது.
'நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஒரு அணுவளவு கூட
அநியாயம் செய்ய மாட்டான்;...' ( 4:40)
மேலும் அருள்மறை குர்ஆனின் 21வது அத்தியாயம் ஸுரத்துல்
அன்பியாவின் 47வது வசனம் கீழ் கண்டவாறு
குறிப்பிடுகிறது.
'இன்னும் கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே
நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும்
அநியாயம் செய்யப்பட மாட்டாது: மேலும் (நன்மை,
தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும்
நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறு கணக்கெடுக்க
நாமே போதும்.' ( 21:47)
5. தேர்வில் காப்பி அடிக்கும் மாணவனை -
மன்னிக்கக்கூடிய ஆசிரியர் ஓர் உதாரணம்:
ஆசிரியர் ஒருவர் தேர்வு நடந்து கொண்டிருக்கும் பொழுது
மாணவன் ஒருவன் காப்பி அடிப்பதை கையும் களவுமாக
பிடித்து விடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
ஆசிரியர் கருணை உள்ளம் கொண்டவர். மன்னிக்கும் மனோ
பக்குவமும் உள்ளவர். எனவே தொடர்ந்து காப்பி அடிக்க
மாணவனை அனுமதித்து விடுகிறார் என்றும் வைத்துக்
கொள்ளுங்கள். இரவு முழுவதும் கண் விழித்து படித்து
விட்டு வந்து தேர்வு எழுதும் மற்ற மாணவர்கள் ஆசிரியரை
கருணை உள்ளம் கொண்டவர் என்றும், மன்னிக்கும் மனோ
பக்குவம் உள்ளவர் என்றும் ஏற்றுக் கொள்ளும் அதே
வேளையில், மாணவர்கள் - ஆசிரியரை அநியாயக்காரர் என்று
அழைப்பார்கள். ஆசிரியரின் கருணையுள்ளம் மேலும் பல
மாணவர்களை தேர்வில் காப்பி அடிக்கத் தூண்டும். இதுபோல
எல்லா ஆசிரியர்களும் கருணையுள்ளம் கொண்டு மாணவர்களை
தேர்வில் காப்பி அடிக்க அனுமதித்தால், எல்லா
மாணவர்களிடமும் தேர்வுக்காக படித்து எழுதும் பழக்கம்
மாறி, காப்பி அடிக்கும் பழக்கம் உருவாகும். காப்பி
அடித்ததால் எல்லா மாணவர்களும் அதிக மதிப்பெண்கள்
பெற்று தேர்ச்சி பெறுவார்கள். தேரிவியலில் அதிக
மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறும் மாணவர்கள், நடைமுறை
வாழக்கையில் தோல்வியைத்தான் சந்திப்பார்கள்.
மாணவர்களுக்காக தேர்வு நடத்துவதின் முழு நோக்கமும்
தோல்வியைத் தழுவும் என்பது நிச்சயம்.
6. மனிதனுடைய இவ்வுலக வாழ்க்கை, மறுமை வாழ்க்கைக்கான
தேர்வு.
நம்முடைய இவ்வுலக வாழ்க்கையானது மறுமை வாழ்க்கைக்கு
உரிய தேர்வுதான். அருள்மறை குர்ஆனின் 67வது அத்தியாயம்
ஸுரத்துல் முல்க் - ன் 2வது வசனம் கீழ் கண்டவாறு
குறிப்பிடுகிறது.
'உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச்
சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும்
படைத்தான்: மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்: மிக
மன்னிப்பவன்.'( - 67:2)
7. அல்லாஹ் எல்லா மனிதர்களையும் தண்டனை அளிக்காமல்,
மன்னித்து விடுவதாக இருந்தால் யார்தான் அல்லாஹ்வுக்கு
அடிபணிவார்?.
அல்லாஹ் எந்த மனிதருக்கும் தண்டனை அளிப்பதில்லை. எல்லா
மனிதர்களுக்கம் மன்னிப்பளித்து விட்டு விடுவான் என்கிற
நிலை இருக்கும் எனில் - மனிதர்கள் ஏன் அல்லாஹ்வுக்கு
அடி பணிந்து நடக்க வேண்டும்?. யாரும் நரகத்துக்கு
போகமாட்டார்கள் என்பதை நானும் ஆதரிக்கிறேன். ஆனால்
மனிதர்கள் வாழும் இந்த உலகம் அல்லவா நரகமாகப் மாறி
விடும். எல்லா மனிதர்களும் பாரபட்சமின்றி
சொர்க்கத்திற்குத்தான் செல்வார்கள் எனில் - மனிதன்
இவ்வுலகில் படைக்கப் பட்டதின் நோக்கம்தான் என்ன?. எனவே
இவ்வுலக வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைக்கு உண்டான
ஒரு தேர்வேயன்றி - வேறில்லை.
8. அல்லாஹ் - தன் கட்டளைகளுக்குக் கீழ்
படிகிறவர்களுக்கு மாத்திரம்தான் மன்னிப்பு வழங்குவான்.
அல்லாஹ் - தன் கட்டளைககளுக்குக் கீழ் படிகிறவர்களுக்கு
மாத்திரம்தான் மன்னிப்பு வழங்குவான். அருள்மறை
குர்ஆனின் 39வது அத்தியாயம் ஸுரத்துஜ் ஜுமரின் 53
முதல் 55வது வசனங்கள் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:
'என் அடியார்களே!. (உங்களில்) எவரும் வரம்பு மீறி
தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும்,
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க
வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும்
மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்:
மிக்க கருணையுடையவன்' (என்று நான் கூறியதை நபியே!)
நீர் கூறுவீராக.' ( - 39:53)
ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே
நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே
முற்றிலும் வழிபடுங்கள்: (வேதனை வந்து விட்;டால்)
பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். ( - 39:54)
நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை
வரும்முன்னரே, உங்கள் இறவைனால் உங்களுக்கருளப்பட்ட
அழகானவற்றை பின்பற்றுங்கள். ( - 39:55)
நான்கு வகையான செயல்கள் மூலம் நிங்கள் செய்கிற
தவறுகளிலிருந்து திருந்திக் கொள்ள முடியும். அவையாவன:
1. முதலில் நீங்கள் செய்யும் தவறான செயல்கள் சரியானது
இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
2. இரண்டாவதாக செய்யும் தவறுகளை உடனடியாக
நிறுத்துங்கள்.
3. மூன்றவதாக நீங்கள் செய்த தவறுகளை இனி ஒருபோதும்
செய்யாதீர்கள்.
4. கடைசியாக நீங்கள் செய்த தவறுகளால் எவரேனும்
பாதிக்கப் பட்டிருந்தால், பாதிக்கப் பட்டதற்கான
பரிகாரம் தேடுங்கள்.
|