|
Go to Index
|
 |
|
தமிழில் : அபு இஸாரா
|
கேள்வி எண்
14.
இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை
செய்திருப்பது ஏன்?
பதில்:
இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை
செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை
ஏன்?. என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும்
விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.
பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி
குர்ஆனின் தெளிவாக்கம்:
பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி
அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
'தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும்
அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான்
உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்.' (அல்-குர்ஆன்
அத்தியாயம் - 02 வசனம் 173)
மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின்
மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம் ஆறு - 145வது
வசனத்திலும் - அத்தியாயம் பதினாறு - 115வது
வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் -
இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை
செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.
பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும்
குறிப்பிடுகின்றது.
கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும்
தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால்
அவர்களும் அறிந்து கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்ணத்
தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பைபிளின் அத்தியாயம் 11 - லெவிட்டிக்கஸ்
(Leviticus) வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின் அத்தியாயம் 14 -
டியுட்டர்னோமி (Deuteronomy) வசனம் 8 ம் பன்றி
இறைச்சி உண்ணத் தடை பற்றி அறிவிக்கின்றன.
மேலும் பைபிளின் அத்தியாயம் 65 - புக் ஆஃப் இஷையா
(Book of Isaiyah) 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில்
பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளது.
பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள்
உண்டாகின்றன.
எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே
இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க
ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான்
ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால்
மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது. பன்றி
இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு
(RoundWorm) ஊசிப்புழு
(inWorm)
கொக்கிப்புழு (HookWorm)
போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி
இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு
உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின்
அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும்
முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப்
பாகங்களுக்கும் பரவுகிறது. இந்த முட்டை மனித மூளையச்
சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த
முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு
மாரடைப்பு உண்டாகிறது. இந்த முட்டை மனிதனின் கண்களைச்
சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த
முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல்
பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால்
மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள்
மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும்
வல்லமை உள்ளவை.
பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ்
(Trichura Tichurasis)
என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான
குடற்புழு உள்ளது. பன்றி இறைச்சியை நன்றாக வேக
வைத்துவிட்டால் இது போன்ற புழுக்கள் மரணித்து
விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான
கருத்து மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய ஆய்வு
ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது - இருபத்து
நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ்
(Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால்
தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு
பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து
சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான
வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் -
குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம்
அறியும் செய்தி
பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.
பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே
அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச்
சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் -
மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் - மாரடைப்பும்
உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம்
பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம்
இல்லை.
உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம்
பன்றி.
பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட
விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும்
மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில்
ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன
கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் -
காடுகளிலும் - வெட்டவெளியிலும்தான் மலஜலம்
கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.
ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக
சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர்
வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான
சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து
வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில்
நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் - பன்றி
இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் -
பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம்
பன்றி.
உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட
மிருகம் பன்றி.
உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட
மிருகம் பன்றிதான். தனது நண்பர்களை அழைத்து வந்து தனது
துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம்
பன்றி. அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி
உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இரவு நேர
பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் 'மனைவியரை
மாற்றிக் கொள்ளும் பண்பாடு' (அதாவது எனது மனைவியுடன்
நீ உனது மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக
இருக்கிறார்கள். பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப்
போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான நாம்
அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் -
மிகவும் பண்பாடு உடையவர்கள் எனவும் தலைக்கு மேல்
வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள் என்ன செய்தாலும் அதனை
நாமும் அப்படியே பின்பற்றுகிறோம். சமீபத்தில்
மும்பையிலிருந்து பிரசுரமாகும் 'ஐலேண்ட்' என்னும்
மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை 'மனைவியரை
மாற்றிக் கொள்ளும் பண்பாடு' மும்பை வட்டாரத்தில் சர்வ
சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.
|